இலங்கை விமானப்படையினால் நடத்தப்படும் வன்னி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 180 பேர் இன்று வெளியேறியுள்ளனர். தனிமைப்படுத்தல் காலத்தை நிற...
இலங்கை விமானப்படையினால் நடத்தப்படும் வன்னி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 180 பேர் இன்று வெளியேறியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துகொண்டவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது.
அனுராதபுரம், குருநாகல், பொல்கஹவெல மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வெளியேறியுள்ளனர்.
குறித்த 180 பேரும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.