யாழ்.கொடிகாமம்- வெள்ளம்பொக்கட்டி பகுதியில் கணவன் மனைவிக்கிடையிலான சண்டையில் விலக்கு பிடிக்க சென்ற 23 வயதான இளம் பெண் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கணவன் மனைவிக்கிடையில் நீண்ட நாட்களாக தர்க்கம் இருந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்திருந்ததாகவும், இன்று மாலை கணவன் மனைவியை பார்க்க வீட்டுக்கு சென்றிருக்கின்றான். இதன்போது கணவன் மனைவிக்கிடையில் தர்க்கம் உருவான நிலையில் மனைவியின் சகோதரியான குறித்த இளம் பெண் விலக்கு பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது சரமாரி கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்ட பெண் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கத்திக்குத்துக்கு இலக்கானவர் 23 வயதான க.சசிகலா என கூறப்படுவதுடன் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கணவன் மனைவிக்கிடையில் நீண்ட நாட்களாக தர்க்கம் இருந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்திருந்ததாகவும், இன்று மாலை கணவன் மனைவியை பார்க்க வீட்டுக்கு சென்றிருக்கின்றான்.
இதன்போது கணவன் மனைவிக்கிடையில் தர்க்கம் உருவான நிலையில் மனைவியின் சகோதரியான குறித்த இளம் பெண் விலக்கு பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது சரமாரி கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்ட பெண்
சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கத்திக்குத்துக்கு இலக்கானவர் 23 வயதான க.சசிகலா என கூறப்படுவதுடன் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.