இந்தியாவில் ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லொறி , எதிரே வந்த மற்றுமொரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 புலம்பெயர் தொழிலாளர...
இந்தியாவில் ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லொறி , எதிரே வந்த மற்றுமொரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.
அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆனாலும், சில தொழிலாளர்கள் நடந்தோ, லொறியில் ஏறியோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லொறியில் மொத்தமாக பயணித்தனர்.
அவர்களை ஏற்றி வந்த லொறி , உத்தரபிரதேச மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.