சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று...
சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 67வயதான ஆண் ஒருவரும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 67வயதான ஆண் ஒருவரும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.