யாழில் இன்றும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர்...
அதில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 4 பேர், முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 6 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரிடி பிரிவுக்கு உட்பட்ட 30 பேர் ஆகியோருக்கே மேற்படி பரிசோதணை நடத்தப்பட்டது என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.