இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாவிட்டால் 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் செள...
இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாவிட்டால் 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியின் நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாவிட்டால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறைந்த அளவிலான இரசிகர்களைக் கொண்டு ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதானாலும் பல பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஐ.பி.எல் போட்டி, மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்தப் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.