5000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இருந்து பிரதேச மற்றும் கிராமிய அரசியல்வாதிகளை ஒதுக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோ...
5000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இருந்து பிரதேச மற்றும் கிராமிய அரசியல்வாதிகளை ஒதுக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது,
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்த கடிதமொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்ட்டுள்ளது,
தற்போது 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் இந்த செயற்பாடு ஆளுந்தரப்பின் கட்சிகளை ஊக்குவிக்கும் செயற்பாடாக மாறியுள்ளதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்,
இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சியினதோ அல்லது வேட்பாளரினதோ பிரசாரத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.