கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, பெருந்தோட்டங்களைச் சேர்ந்த பலருக்கு இ...
கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, பெருந்தோட்டங்களைச் சேர்ந்த பலருக்கு இதுவரை கிடைக்கவில்லையென, தேசிய ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீவரத்ன தேரர் தெரிவித்தார்.
நுவரெலியா- நானுஓயா பிரதேசத்திலுள்ள பல தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காமை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக, தேரர் நேற்று (6) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட மக்களுக்கும் 5,000 ரூபாய், கட்சி பேதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன்,
அவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் மலையகக் கட்சிகளுக்கு, மாதாந்தம் வழங்கும் சந்தாவை நிறுத்துமாறும் அவர் மக்களிடம் தெரிவித்தார்.
நுவரெலியா- நானுஓயா பிரதேசத்திலுள்ள பல தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காமை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக, தேரர் நேற்று (6) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட மக்களுக்கும் 5,000 ரூபாய், கட்சி பேதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன்,
அவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் மலையகக் கட்சிகளுக்கு, மாதாந்தம் வழங்கும் சந்தாவை நிறுத்துமாறும் அவர் மக்களிடம் தெரிவித்தார்.