யாழ் குடாநாட்டில் தற்போது பல்வேறு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன . குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வ...
யாழ் குடாநாட்டில் தற்போது பல்வேறு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன . குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான விபத்துக்கள்மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இவ்வாறு யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது. அவர்கள் கடுமையான தலை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே உந்துருளியினை பாவிக்கும் இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வண்டியை மெதுவாக செலுத்த வேண்டும்
மாலை நேரங்களில் இரவு நேரங்களில் வேகமாகச் செலுத்துவதில் தவிர்த்துக் கொள்ளுமாறு இளைஞர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். வீதி விபத்து ஏற்பட்டால் சில சமயங்களில் உயிரை காப்பாற்ற கூட முடியாமல் வைத்தியர்களுக்கு போகின்றது. ஆகவே இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை.
எங்கள் பகுதியில் covid 19 இன் தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள். எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார்சைக்கிளினை வாங்கி வழங்கும் பெற்றோர்களும் இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.
அவர்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செலுத்துவது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது. ஆகவே அவர்கள் வேகத்தினை தவிர்த்து மோட்டார் சைக்கிள் செலுத்துவது என பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தற்பொழுது பாவனையில் இருக்கின்ற மோட்டார்சைக்கிள்கள் மிக வேகத்தில் இலக்கினை அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாவனைக்கு வருகின்ற மோட்டார் சைக்கிள் ஒவ்வொன்றும் அதன் வேகத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கின்றது. தற்பொழுது பாவனையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் 100 கிலோமீட்டர், 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இதன் ஆபத்து தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு குடும்பப் பொறுப்பு உள்ளது. இவர்களுடைய எதிர்காலம் எங்கே செல்கின்றது.
Covid19 தொற்று நாட்டில் ஏற்பட்ட பொழுது கூட இவர்கள் எவ்வளவு ஒத்துழைப்பினை வழங்கி னார்கள். இவர்களை நம்பி இவருடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அதிக வேகமாக செலுத்தக் கூடிய வகையில் அமைக்கப் பெற்றுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் எங்களுடைய பிரதேசத்துக்கு தேவையில்லை. இது தொடர்பில் உரிய திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வது எங்கள் பகுதிக்கு பொருத்தமானதாக இருக்கும். இது தரப்பில் பொலிசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் குழுவொன்றை அமைக்க பெற்று இதன் முன்னாயத்த நடவடிக்கைகள் எவ்வாறு வீதி விபத்துக்களை தடுக்க முடியும் என்பதில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.
அதன் அடிப்படையில் நான் மீண்டும் கூறிக்கொள்வது இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது மிக மிக அவதானமாக செலுத்துமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள். கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கவலைக்கிடமான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவருக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சத்திரசிகிச்சை செய்ய முடியாது. அவருடைய மூளைப் பகுதியில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் மிகவும் கவலைப்பட்டு உள்ளனர்.
அதேபோல் இன்னொரு நபருக்கும் கழுத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது அவர் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த மூவரின் நிலையினையும் எடுத்துக் கொண்டால் இவர்கள் கடந்த காலங்களில் எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பினை வழங்கி இளைஞர்கள். COVID 19 தொற்று இடம்பெற்ற பொழுது இவர்கள் பாரிய ஒத்துழைப்பினை இந்த சமூகத்துக்காக வழங்கியவர்கள். இவர்கள் மூவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை பேணிக்கொள்ள வேண்டும் என்றார்.
குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது. அவர்கள் கடுமையான தலை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே உந்துருளியினை பாவிக்கும் இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வண்டியை மெதுவாக செலுத்த வேண்டும்
மாலை நேரங்களில் இரவு நேரங்களில் வேகமாகச் செலுத்துவதில் தவிர்த்துக் கொள்ளுமாறு இளைஞர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். வீதி விபத்து ஏற்பட்டால் சில சமயங்களில் உயிரை காப்பாற்ற கூட முடியாமல் வைத்தியர்களுக்கு போகின்றது. ஆகவே இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை.
எங்கள் பகுதியில் covid 19 இன் தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள். எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார்சைக்கிளினை வாங்கி வழங்கும் பெற்றோர்களும் இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.
அவர்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செலுத்துவது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது. ஆகவே அவர்கள் வேகத்தினை தவிர்த்து மோட்டார் சைக்கிள் செலுத்துவது என பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தற்பொழுது பாவனையில் இருக்கின்ற மோட்டார்சைக்கிள்கள் மிக வேகத்தில் இலக்கினை அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாவனைக்கு வருகின்ற மோட்டார் சைக்கிள் ஒவ்வொன்றும் அதன் வேகத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கின்றது. தற்பொழுது பாவனையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் 100 கிலோமீட்டர், 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இதன் ஆபத்து தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு குடும்பப் பொறுப்பு உள்ளது. இவர்களுடைய எதிர்காலம் எங்கே செல்கின்றது.
Covid19 தொற்று நாட்டில் ஏற்பட்ட பொழுது கூட இவர்கள் எவ்வளவு ஒத்துழைப்பினை வழங்கி னார்கள். இவர்களை நம்பி இவருடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அதிக வேகமாக செலுத்தக் கூடிய வகையில் அமைக்கப் பெற்றுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் எங்களுடைய பிரதேசத்துக்கு தேவையில்லை. இது தொடர்பில் உரிய திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வது எங்கள் பகுதிக்கு பொருத்தமானதாக இருக்கும். இது தரப்பில் பொலிசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் குழுவொன்றை அமைக்க பெற்று இதன் முன்னாயத்த நடவடிக்கைகள் எவ்வாறு வீதி விபத்துக்களை தடுக்க முடியும் என்பதில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.
அதன் அடிப்படையில் நான் மீண்டும் கூறிக்கொள்வது இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது மிக மிக அவதானமாக செலுத்துமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள். கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கவலைக்கிடமான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவருக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சத்திரசிகிச்சை செய்ய முடியாது. அவருடைய மூளைப் பகுதியில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் மிகவும் கவலைப்பட்டு உள்ளனர்.
அதேபோல் இன்னொரு நபருக்கும் கழுத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது அவர் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த மூவரின் நிலையினையும் எடுத்துக் கொண்டால் இவர்கள் கடந்த காலங்களில் எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பினை வழங்கி இளைஞர்கள். COVID 19 தொற்று இடம்பெற்ற பொழுது இவர்கள் பாரிய ஒத்துழைப்பினை இந்த சமூகத்துக்காக வழங்கியவர்கள். இவர்கள் மூவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை பேணிக்கொள்ள வேண்டும் என்றார்.