அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமான சந்திப்பு இன்று நடைபெறும். அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ...
அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமான சந்திப்பு இன்று நடைபெறும்.
அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொது தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலைமைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருந்தனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையிலேயே, அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்றைய தினம் மீண்டும் விசேட கலந்துரையயாடலொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பான தீர்மானம் குறித்தும் ஆணைக்குழு இதன்போது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.