தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன....
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு பண்டார நாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு பண்டார நாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.