வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் ...
வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான தகவல்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (12), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையளித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது, தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி, பிரதமரும் சுமந்திரனும் ஒரு மணிநேரம் உரையாடியுள்ளனர்.