பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் இன்று காலை யாழ். செம்ம...
பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் இன்று காலை யாழ். செம்மணிப் பகுதியில் நினைவு கூரப்பட்டது.
தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சி கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது ஒன்று கூடுவதாக எச்சரிக்கை விடுத்த பொலிசார் நினைவுகூறியோரையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். ஆயினும் தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் வாரத்தின் முதல்நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி இடம்பெற்றது.