கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெரோயின் வைத்தி...
கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான செஹான் மதுசங்க ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 23 ஆம் திகதி பன்னல நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட செஹான் மதுசங்கவிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட செஹான் மதுசங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.