முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ம...
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நினைவேந்தல் நடந்து முடிந்தது.
அரசியல்வாதிகள், மத குருக்கள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் என பெருமளவு மக்கள் சமூக இடைவெளியை பேணி கலந்து கொண்ட இந்த நிகழ்வு காலை 10 மணிக்கு ஆரம்பிக்க பிள்ளைகள் இருவரையும், கணவனையும் இழந்த லக்ஸ்மனன் பரமேஸ்வரி என்கிற தாய் ஒருவர் பொது சுடரை ஏற்றினார்.
அஞ்சலியில் கலந்துகொள்வோர் கைகளை சுத்தம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் சமூக இடைவெளியை பேணி விளக்கேற்றும் வகையில் சுடர் கம்பங்கள் நாட்டப்பட்டிருந்தது.
இதேவேளை நிகழ்வுக்கு சென்ற பலர் பரந்தனில் வைத்து இராணுவத்தால் திருப்பியனுப்பபட்டனர். அப்படி இருந்தும் பல பொதுமக்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.