கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் இதுவரை முழுமையாக நீங்காத காரணத்தினால் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய இறுக்கமான சுகாதார நடமுறைகள் தொடர்பில் வ...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் இதுவரை முழுமையாக நீங்காத காரணத்தினால் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய இறுக்கமான சுகாதார நடமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த நடமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யவும் அத்திணைக்களம் கோரியுள்ளது.
உணவகத்தின் உள்ளே இருவருக்கு இடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், உணவு கையாளும் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும், சுத்தமாக இருக்க வேண்டும், உணவு கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாள்கள், 2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளை கழுவுவது உறுதி செய்யப்படவேண்டும்.
உணவகங்களுக்குள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும், சிறிதளவேனும் காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற கோரோனா தொற்றின் குணங்குறிகளுடைய வேலையாள்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோ வளவினுள்ளோ கடமையில் ஈடுபடலாகாது.
பொது மக்கள் இயலுமானவரை உணவினை வாங்கிச் சென்று சப்பிடுவது நன்று, பொதுமக்கள் உணவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தங்களது பகுதிப் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ள முடியும்.
குறித்த நடமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யவும் அத்திணைக்களம் கோரியுள்ளது.
உணவகத்தின் உள்ளே இருவருக்கு இடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், உணவு கையாளும் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும், சுத்தமாக இருக்க வேண்டும், உணவு கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாள்கள், 2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளை கழுவுவது உறுதி செய்யப்படவேண்டும்.
உணவகங்களுக்குள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும், சிறிதளவேனும் காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற கோரோனா தொற்றின் குணங்குறிகளுடைய வேலையாள்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோ வளவினுள்ளோ கடமையில் ஈடுபடலாகாது.
பொது மக்கள் இயலுமானவரை உணவினை வாங்கிச் சென்று சப்பிடுவது நன்று, பொதுமக்கள் உணவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தங்களது பகுதிப் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ள முடியும்.