சிறைக்கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்...
சிறைக்கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக ஏழு வருடங்களுக்கு குறைந்த சிறைத்தண்டனை அனுபவிக்கும் சுமார் 500 சிறைக்கைதிகளை பாரிய கட்டுமான நிறுவனங்களின் கீழ் பணிக்கு அமர்த்த தீர்மானித்திருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்டுமானப் பயிற்சிகளை வழங்குவதற்கு முதற்கட்டமாக மேற்படி தெரிவுசெய்யப்பட்ட சிறைக்கைதிகளுக்கு தற்போது மனவள ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.