புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக எச்சரித்த பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. போர் வ...
புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக எச்சரித்த பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
போர் வெற்றியின் 11ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 14 ஆயிரத்திற்கும் அதிகமான படையினருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வேண்டுகோளின் பேரில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் லண்டனில் இலங்கையின் சுதந்திர தினத்தையோட்டி கரிநாள் போராட்டத்தை நடத்திய புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக எச்சரித்த பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது.