ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குண...
ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆயினும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதோடு, இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.