இலங்கைக்கு மேலாக, வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைக் காரணமாக எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்ட
நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு. |
இலங்கைக்கு மேலாக, வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைக் காரணமாக எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.விசேடமாக மாலை அல்லது இரவு வேளைகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் 100 மில்லி மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது 70 முதல் 80 கிலோ மீற்றருக்கும் அதிகரித்து வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.