பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 107 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகா...
பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 107 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் மின்னல் தாக்கி 83 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் பெருமளவு சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியாக வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், மோசமான வானிலை நிலவும் சூழலில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் நிதிஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அனர்த்தம் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், “பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் மின்னலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற துயர்மிகு செய்தி கேட்டேன். மாநில அரசுகள் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.