இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேர...
இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்று இரவு வெளியாகுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று வெளியான தகவல் இன்றே உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவுகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.