ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 14 வயதான முஸ்லிம் சிறுவன் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பொலிஸ் சோதனை சாவடியொன்...
ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 14 வயதான முஸ்லிம் சிறுவன் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பொலிஸ் சோதனை சாவடியொன்றிற்கு எதிரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த இடத்திற்கு பொலிசாரும் சென்றனர். சிறுவனின் உடலில் காயங்கள் உள்ளதாக இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை முன்னாள் எம்.பி அலிசாஹிர் மௌலானா வெளியிட்டுள்ளார். இது தொடர்பான முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக களுத்துறைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அளுத்கம, தர்கா நகரில் இந்த சம்பவம் கடந்த மே 2ஆம் திகதி நடந்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இந்த சிசிரிவி காணொளியை வெளியிட்டுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டது, பின்னர் இனரீதியான தாக்குதலை சந்தித்த விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அலிசாஹிர் மௌலானாவின் தகவலின்படி, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தாரிக் அஹமட் என்ற சிறுவன் தாக்கப்பட்டதுடன், நாகொட வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி (ஜே.எம்.ஓ) இனரீதியாக விவரப்படுத்தியதாக கூறப்படுகிறது.
4 வயதிலிருந்தே மன இறுக்கம் இருப்பது கண்டறியப்பட்ட தாரிக் அஹமட், மே 25 அன்று தர்கா நகருக்குள் நுழைந்துள்ளார். அது ஊரடங்கு அமுலில் இருந்த சமயம். ஊரடங்கு உத்தரவை மீறியதாக சிறுவன் குற்றம் சுமத்தப்பட்டார்.
மௌலானா வெளியிட்ட வீடியோவில், சிறுவன் ஒரு குழுவினரின் பிடியில் உள்ளார். அவர் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சிறுவனின் தந்தைக்கு அறிவிக்கப்பட்டு, சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். தாக்கப்பட்ட சிறுவனின் தந்தையின் கூற்றுப்படி, காவல்த்துறை அவரை வாய்மொழி மூலம் துஷ்பிரயோகம் செய்தது என்றார்.
8 வளர்ந்தவர்களால் தாக்கப்பட்ட சிறுவனின் தலை, முதுகு, கைகளில் காயமுள்ளதாக மௌலானா தெரிவித்துள்ளார்.
பல முயற்சிகளின் பின்னர் களுத்துறைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்தியதை தொடர்ந்து, அவர் சிறுவனை மருத்தவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டதாக மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
சிறுவனை நாகொட வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியின் (ஜே.எம்.ஓ) சோதனைக்கு அழைத்துச் சென்றபோது, குடும்பம் இனரீதியாக விமர்சிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொரோனா பரவலிற்கு அவர்களது சமூகமே காரணமென குறிப்பிடப்பட்டதாக மௌலானா வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு சிறுவனிற்கு முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கொட தேசிய மனநல நிறுவனத்தில் பரிசோதிக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும், அங்கு முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மௌலானா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.