இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளத...
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லடாக்கில் சண்டை நடந்த கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இரு தரப்பு இராணுவத்தினரும் விலகிவிட்டதாகவும் தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எல்லைப் பகுதியில் சீன ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்திய இராணுவத்துடனான சண்டையில் இறந்தவர்களின் உடல்களையும் காயமுற்றவர்களையும் கொண்டுசெல்லும் பணியில் இவை ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விரைவில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் இராணுவத் தரப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.