கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிலே இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை எனவும் அவ்வாறான நிலைமைக ள் இருப்பதாகவும் இலங்க...
கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிலே இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை எனவும் அவ்வாறான நிலைமைக
ள் இருப்பதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ள் இருப்பதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....
கோட்டாபய ராஜபக்சவினுடைய இயல்பு, அவருக்கு இருக்கின்ற இராணுவத்தில் கடமையாற்றிய அனுபவங்கள், இப்போது அவர் ஜனநாயக ரீதியாக ஒரு அரச தலைவராக வந்துள்ளார் மக்கள் ஆதரித்து இருக்கின்றார்கள்.
ஆனால் அவர் இந்த பிரதேசத்திலே நாங்கள் அறிந்த வகையில் 20 ஆயிரம் உளவாளிகளையும் நடமாட விட்டிருப்பதாக எங்களுக்கு செய்திகள் இருக்கின்றன.
எதிர்காலத்தில் ஒரு பூரணமான இராணுவ ஆட்சி ஒன்றை அவர் நிறுவுவதற்கு ஒரு சர்வாதிகாரமான ஆட்சியொன்றை ஜனநாயகத்திற்கு ஊடாக, ஜனநாயகத்தில் பெற்ற வெற்றி என்று சொல்லி இந்த நாட்டிலே நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. அப்படித்தான் நிலைமைகள் இருக்கின்றன.
இந்த நிலைமையில் இன்றைக்கு ஜனநாயக சக்திகள் எதிர் அணியிலே ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனப்பட்டு பிளவுபட்டு நிற்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.
அதை விட முஸ்லீம்கள் தரப்பில், மலையக தரப்பில் கூட எல்லோரும் பலமாக அல்லது ஒன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலைமை இன்னும் ஏற்படவில்லை.
அதை விட முக்கியமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரு பலமான நிலையை நிருபிக்க வேண்டிய, பிரதிநிதித்துவத்தை நிருபிக்க வேண்டிய ஜனநாயக சக்தியாக பலமடைய வேண்டிய நிலமை ஏற்பட வேண்டும்.
ஆனால் இதுவரையில் கிழக்கிலிருந்து வடக்குவரைக்கும் பல மாவட்டங்களுக்கு நான் பயனம் செய்து இருக்கின்றேன். பல நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கின்றேன் மக்கள் மிகப் பெரும்பாலும், சில இடங்களில் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பாக சில சங்கடங்கள் இருந்தாலும் அவர்கள் மிக உறுதியாக இருக்கின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரு வெற்றிபெற வைப்பதே இப்போது தேவை என நினைக்கின்றார்கள் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.