முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நேற்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு 07 மணி நேர வாக்குமூ...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நேற்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு 07 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்திருந்தது,
நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு முன் ஆஜரான ரிஷாட் பதியுதீனிடம் நேற்று மாலை வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது,
இதன் போது தமக்கோ அல்லது தமது குடும்பத்துக்கோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை என்பதற்கான ஆதாரங்களை ஆணைக்குழுவில் முன்வைத்தாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
உயிரத்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுள் ஒருவரான இன்சாப் இப்ராஹிம் தமது சகோதரருடனும் தம்முடன் இதற்கு முன்னர் முரண்பட்டிருந்தாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் ரீதியாக ஆறு தடவைகள் தமது சகோதரரை இன்சாப் இப்ராஹிம் தொடர்பு கொண்டமைக்காக அவரை தடுத்து வைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் அதிக தடவைகள் கதைத்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமது சகோதரர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை ஞானசார தேரர் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புக்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினால் குறித்த அமைப்புக்களையும் அழைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என அவர மேலும் வலியுறுத்தியுள்ளார்.