பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியின் மேலும் 7 விளையாட்டு வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொஹம...
பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியின் மேலும் 7 விளையாட்டு வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொஹமட் ஹஷ்னேன், ஃபக்ஹார் ஷமான், மொஹட் ரிஷ்வான், காசிப் பாட்ஹி, மொஹமட் ஹப்பீஸ், வஹாம் ரியாஸ் மற்றும் இம்ரான் கான் ஆகியவர்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக அந்நாட்டு செல்வதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டர்.
ராவுல்பெண்டியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த அணியின் ஹைதர் அலி (பேட்ஸ்மேன்), ஹரிஸ் ரஃப் (பந்து வீச்சாளர்), ஷதிப் கான் (பந்து வீச்சாளர்) ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸ் உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மூன்று பேருக்கும் வைரஸ் தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், அறிகுறிகள் இல்லாமலேயே வீரர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏனைய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.