கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த நாடு பூராகவும் நிலவிய ஊரடங்குச்சட்டம் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து தடைப்பட்டிருந்தது...
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த நாடு பூராகவும் நிலவிய ஊரடங்குச்சட்டம் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நாடு வழமைக்கு திரும்பும் நிலையில் இன்றிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையேயான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.
எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புகையிரநிலையத்திற்க்குள் நுழையும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.