கொரோனா வைரஸினை விடவும் நான் மிகவும் பயங்கரமானவென முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். நாவிதன்வெளி...
கொரோனா வைரஸினை விடவும் நான் மிகவும் பயங்கரமானவென முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
நாவிதன்வெளி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போராட்ட காலத்தில் ஆனையிறவு பகுதியில் 2000க்கும் 3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான படையினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா அம்மான் இதன்போது குறிப்பிட்டார். கொரோனாவால் கூட ஒரே இரவில் அதிகளவு மரணங்கள் ஏற்படுவதில்லை ஆகவே நான் கொரோனா வைரஸை விட பயங்கரமானவனென தெரிவித்தார்.