நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணுவதற்கான ஒத்திகை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.இந்த ஒத்திகையில் 6 ஆயிரம் மாதிரி வாக்க...
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணுவதற்கான ஒத்திகை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.இந்த ஒத்திகையில் 6 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்டது.
வாக்குச் சீட்டுக்களை என்னும் பணியில் 22 உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2 ஆயிரம் வாக்குசீட்டுக்கள் கொண்ட பெட்டி ஒன்றும் ஏனைய பெட்டிகளில் நூற்றுக்கணக்கான வாக்குச் சீட்டுக்கள் என பெட்டிகளில் வாக்குச் சீட்டுக்கள் கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணப்பட்டது.
இந்த வாக்கு என்னும் ஒத்திகையில் பிரதானமாக குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை வாக்குச் சீட்டுக்களை என்ன முடியும் என்பதையே முக்கியமாக கவனிக்கப்பட்டது.
மேலும் வாக்கெண்ணும் ஒத்திகையை சுகாதார திணைக்களத்தினர்,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல்,யாழ்,கிளிநொச்சி அரச அதிபர்கள்,புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் யாழ்,கிளநொச்சி உதவி தேர்தல் ஆணையாளர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.