இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெற்ற பரிசோதனையில் பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொ...
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெற்ற பரிசோதனையில் பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 86 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 4 பேர்,
ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 6 பேர்,
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையை சேர்ந்த 5 பேர், தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையை சேர்ந்த ஒருவர்,
காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர்,
இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேர், விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 19 பேர், பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 46 பேரென மொத்தம் 86 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.