இலங்கையின் முன்னணி இரும்பு உருக்குக் கம்பிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தடை விதித்துள்ளது. தரச்சான்...
இலங்கையின் முன்னணி இரும்பு உருக்குக் கம்பிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தடை விதித்துள்ளது.
தரச்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தும் முறையான தரங்களுக்கு அமைய இரும்புக் கம்பிகளை உற்பத்தி செய்யத்தவறிய குற்றச்சாட்டு அந்த நிறுவனங்கள் மீது உள்ளன.
இதனால் சுமார் 22 மெட்றிக் டொன் கம்பிகள் விற்பனை செய்ய முடியாத வகையில் உள்ளன.
வத்தளையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட நுகர்வோர் விவகார அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.