நல்லூர் பகுதியில் ஹொரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த...
நல்லூர் பகுதியில் ஹொரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நல்லூர் பகுதியில் ஹொரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவரை பொலிஸார் சோதனையிட்டிருந்தனர். அப்போது குறித்த இளைஞனிடம் இருந்து 70 மில்லிக்கிராம் ஹொரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் ஹொரோயின் போதைப்பொருள் கைது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.