மரியான் திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் பரத் பாலா கொரோனா கால ஊரடங்கு அனுபவங்கள் குறித்து எடுத்துள்ள ‘மீண்டும் எழுவோம்’ என்ற ஆவணப்படத்தை வ...
மரியான் திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் பரத் பாலா கொரோனா கால ஊரடங்கு அனுபவங்கள் குறித்து எடுத்துள்ள ‘மீண்டும் எழுவோம்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பரத் பாலா இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "இது நமது வரலாற்றில் ஒரு அசாதாரண நேரம். இது வருங்கால சந்ததியினருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டில்1.3 பில்லியன் மக்கள் எவ்வாறு முற்றிலுமாக நவீன யுகத்தில் முடங்கினர் என்பதை வருங்கால தலைமுறைப் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
உலக வரலாற்றின் இந்த நீரோட்டத்தை ஆவணப்படுத்த வேண்டி 14 மாநிலங்களில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தைப் படக்குழுவினர் படம்பிடித்துள்ளனர். காஷ்மீர் முதல் கேரளா வரை.. அதேபோல் குஜராத் முதல் அஸ்ஸாம் வரை என ஒட்டுமொத்த நாட்டின் நிலையை இந்தப் படம் உள்ளடக்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படம் நாட்டில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 117 நபர்களின் உதவியுடன் ஊரடங்கின் போது எடுக்கப்பட்டுள்ளது என்றும் வருகின்ற 6 ஆம் தேதி இதனை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.