தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்...

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்த்து கருத்து தெரிவிக்கையில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரு சில விடயங்களை கூறி இருக்கின்றார்கள்.

முக்கியமாக மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிக அதிகபட்சமாக ஆசனங்களுடன் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றும் ஒரு மாற்று அணியோ மாற்று தலைமையோ தேவையற்ற விடயங்கள் என்றும் கூறியுள்ளார். 


ஆகவே நாங்கள் ஒரு பலமான சக்தியாக வருவதன் மூலம் சில சமயம் மீண்டும் ஒருமுறை நாங்கள் எதிர்கட்சித் தலைமையை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் . அவ்வாறு பெற்றுக்கொள்வதன் ஊடாக பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற தோரணையில் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.அது ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றது.

இகவே அதனடிப்படையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக சில கருத்துகளை நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம்.

முதலாவதாக கடந்த நான்கரை வருடங்களாக அல்லது யுத்தத்திற்கு பிற்பாடு தமிழ் மக்கள் ஒரு ஐக்கியத்தின் மேல் நம்பிக்கை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல விடயங்களை சாத்தியம் என்பது நம்பிக்கையாக கொண்டு அவர்களை நாடாளுமன்றம் அனுப்பி இருந்தார்கள்.

ஆனால் கடந்த நான்கரை வருட காலத்தில் இவர்கள் கூறியது போன்று அல்லது இவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆணை அல்லது நம்பிக்கை அதன் அடிப்படையில் அவர்கள் ஏதாவது விடையங்களை  சாதித்திருக்கிறார்களா என்று ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கிறது.

காணிகள் விடுவிப்பாக  இருக்கலாம் அரசியல் கைதிகள் விடுவிப்பாக இருக்கலாம்,  காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்களாக இருக்கலாம்,  ஒரு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவதாக இருக்கலாம். இவை எதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மையான விளக்கம்.

திரு சுமந்திரன் கூறுகின்ற போது ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது, ஒரு பகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள், அரசியல் சாசனம் நாங்கள் ஒரு மிக நீண்ட தூரம் போயிருக்கின்றோம் ஆனால் துரதிஸ்ட வசமாக அது சாத்தியப்படவில்லை போன்ற சில விடயங்களை அவர் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றார்.

 யாழ்ப்பாணத்திலும் சரி கிழக்கிலும் சரி அவ்வாறான சில விடயங்களை சொல்லி வருகின்றார்.

ஆனால் ஒரு விடையத்தை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். கடந்த நான்கரை வருட காலத்தில் வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் முப்படைகளால் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.  இன்னம் எத்தனை ஆயிரம் ஏக்கர் காணி அரசாங்கத்தின் வசம் அல்லது முப்படைகளின் வசம் இருக்கிறது என்பதை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த நான்கரை வருட காலத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது மூன்று ஏக்கர், நான்கு ஏக்கர் என்ற அடிப்படையில் ஒரு சில தடவைகள் காணிகள் விடுவிக்கப்பட்டதே தவிர ஆனால் ஆயிரக்கணக்கான ஏக்கள் காணிகள் இன்னும் முப்படைகளின் வசம்தான் இருக்கின்றது என்பதுதான் உண்மையான விடயம்.

இதே போன்றே அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக அரசாங்கம் முன்வந்து அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான மன்னிப்பை கொடுத்து அவர்களை விடுவித்ததாக இல்லை.

பல பேர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இருந்த அரசியல் கைதிகள் ஒன்றில் பிணையில் வெளிவந்திருக்கிறார்கள்,  இல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது,  இல்லாவிட்டால் அவர்களுக்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு விஷயம் தான் நடந்து முடிந்துள்ளது.

இப்போதும் 91 அரசியல் கைதிகளுக்கு மேல் வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது அல்லது அங்கு இருந்துகொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் சில  அரசியல் கைதிகளை விடுவித்து விட்டோம் என்பது ஒரு அப்பட்டமான பொய்.

ஆகவே சுமந்திரன் வந்து நான் மீண்டும் நான் முன்னமும் சொல்லி இருக்கிறேன் ஒரு கூச்ச நாச்சம் இல்லாமல் ஒரு பொய் சொல்வதை தான் சொல்வது பொய் என்று தெரிந்தால் கூட மக்கள் அதை  ஏற்றுக் கொள்வார்கள் என்று பொய் பேசுவது என்பதை அவர் மிகத் திறம்படமாகவே செய்து வருகின்றார்.

நாங்கள் பார்க்கின்ற பொழுது என்ன நடைபெறுகிறது என்று சொன்னால் தாங்கள் மீண்டும்  ஒருமுறை போய் நான்கரை வருடம் மைத்திரிபால சிறிசேன,  ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச எங்களுடைய சம்பந்தர் ஐயா இவர்கள் எல்லோரும் கூட்டாக இருந்தார்கள் ஒரு கட்டத்தில்.

அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களுக்கு இருந்தது அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது இவர்கள் கூட்டாக இருந்தார்கள் சம்பந்தன் ஐயா  எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் இவர்கள் என்ன விடயத்துக்கு சரி ஒரு முற்று முழுதாக ஏதாவது ஒரு பிரச்சினையை தீர்த்தார்களா.

காணிப்பிரச்சினையை தீர்த்தார்களா நாங்கள் பெரிதாக அரசாங்கம் தர முடியாத விடயங்களை கூட நாங்கள் விட்டுவிடலாம். அதாவது மக்களிடம் இருந்து புடுங்கப்பட்ட காணிகள் மீள கொடுக்கப்பட்டதா இல்லை என்றால் அரசியல் கைதிகள் இவர்களால் விடுவிக்கப்பட்டார்களா? காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது என்பதை தவிர அந்த அலுவலகம் கூட எந்தவிதமான உப்புச்சப்பற்ற அதாவது அதிகாரமற்ற அலுவலகம்.

நாங்கள் போய் ஒரு முறைப்பாட்டை செய்தால் ஒருவரை காணவில்லை என்று அதனை தேடிப் பிடிக்கின்ற அதிகாரம் அவர்களுக்கு கிடையாது.

ஆகவே மீண்டும் ஒரு முறை நீங்கள் பாராளுமன்றம் போய்  முன்னர் இருந்த அந்த ஒரு வலுவான அதாவது மைத்திரி மஹிந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை இது எதுவுமே இனி கிடையாதென  தெரிவித்துள்ளார்.



/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.
தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Ty078IWrnoDi932tiBDChj7cl4ZklVBqTKFyO_NuNsmQJTOBUlVQPxM2CqcCP9jvtP6KcsagAmNrZHfpxxWCDcoqIz9Fq4nvkaqE-YxQYnSJLW8AJvvwI7nlkqVZLnMogO1geJcPKBY/s320/1592318699216_IMG-20200616-WA0002.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Ty078IWrnoDi932tiBDChj7cl4ZklVBqTKFyO_NuNsmQJTOBUlVQPxM2CqcCP9jvtP6KcsagAmNrZHfpxxWCDcoqIz9Fq4nvkaqE-YxQYnSJLW8AJvvwI7nlkqVZLnMogO1geJcPKBY/s72-c/1592318699216_IMG-20200616-WA0002.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/06/blog-post_388.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/06/blog-post_388.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content