தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அலுவலகம், திருநெல்வேலியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நேற்று (03) காலை 09:30 மணியளவில் தம...
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அலுவலகம், திருநெல்வேலியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) காலை 09:30 மணியளவில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசருமான சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
தற்போதுள்ள கொரோனா இடர்காலத்தை கருத்தில்க் கொண்டு, மிக எழிமையாக முன்னெடுக்கப்பட்டதாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக் கட்சி அலுவலகத் திறப்பு நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி. வி. விக்னேஷ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், ரி.சிற்ப்பரன், கட்சியின் பொருளாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் எஸ். இரத்தினகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.