பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறும் முக்கிய கூட்டத்திற்கு பின்னர் அறிவிக...
பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறும் முக்கிய கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் திகதி இன்றைய தினம் அறிவிக்கபடுமிடத்து வேட்பாளர்களுக்கான உரிய இலக்கங்களும் இன்றைய தினமே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான நெறிமுறைகளை பற்றி இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.