சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறப்பதற்கு ...
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பன மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஆலோசனைகளை உரிய தரப்புனர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் 19 ஆயிரத்து 500 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் ஆயிரத்து 500 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஆரம்ப பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.