யாழ்.தென்மராட்சி - அல்லாரையிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் கடை உரிமையாளர் பட...
யாழ்.தென்மராட்சி - அல்லாரையிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் கடை உரிமையாளர் படுகாயமைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அல்லாரை தெற்கில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 40 வயதுடைய குஞ்சுராசா அஜந்தன் என்ற கடை உரிமையாளர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.