நேற்றைய தினம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதியின், தொகுதிக் கிளை மற்றும்மூல கிளை பதவிநிலை ...
நேற்றைய தினம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதியின், தொகுதிக் கிளை மற்றும்மூல கிளை பதவிநிலை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா சி.வி.கே.சிவஞானம் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். சசிகலா ரவிராஜிற்கான அழைப்பு கட்சித் தலைவரும் காங்கேசன்துறைத் தொகுதியின் வேட்பாளருமான மாவை சேனாதிராஜாவினால் விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் பெண் வேட்பாளர் சசிகலா ரவிராஜிற்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சிவஞானம் கட்சி உறுப்பினர்கள் யாவரும் தாமும் ஒரு வேட்பாளர் என நினைத்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமென உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். அத்துடன் மாவை சேனாதிராஜா, வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கும்படி வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளையும் அனுசரணை களையும் தேவையேற்படின் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சசிகலா தனது உரையில் சகலரும் கட்சியின் வெற்றிக்காக உழைத்து, அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் பெண் வேட்பாளர் என்ற ரீதியில் தனக்கும் ஒரு விருப்பு வாக்கை அளிப்பதுடன் பெண்கள் அனைவரும் ஒரு அணியில் திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.