யாழில் நடந்த இன்றைய (16) பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. இன்று 63 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத...
யாழில் நடந்த இன்றைய (16) பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
இன்று 63 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 5 பேர், சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையை சேர்ந்த 2 பேர்,
விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 16 பேர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 38 பேரென மொத்தம் 63 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.