இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. இன்று 25 பேருக்கான பரிசோதனைக...
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
இன்று 25 பேருக்கான பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர் ஒருவர், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட நான்கு பேர், வவுனியா பொது வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 13 பேர், முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 5 பேரென மொத்தம் 25 பேருக்கான பரிசோதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.