சர்ச்சைக்குரிய மிலேனியம் சவால் உடன்படிக்கையில் பாரதூரமான ஆபத்து ஏற்படலாம் என்பதை நிபுணர் குழு ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்ப...
சர்ச்சைக்குரிய மிலேனியம் சவால் உடன்படிக்கையில் பாரதூரமான ஆபத்து ஏற்படலாம் என்பதை நிபுணர் குழு ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹொண்டூரஸ் மற்றும் மடகஸ்கார் போன்ற நாடுகள் பாரிய நெருக்கடியை இவ் ஒப்பந்தம் காரணமாக எதிர்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர் லலித சிரி குணருவன் தலைமையில் தயாரிக்கப்பட்ட மிலேனியம் சவால் பற்றிய ஆய்வுக்குழு நேற்று ஜனாதிபதியிடம் அறிக்கையை வழங்கியது.
இந்த அறிக்கையில், நாடாளுமன்றில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின் அதில் மாற்றம் கொண்டுவர முடியாது. இரு உறுப்பினர்களால் கூட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனையை கடிதம் மூலம் மாற்றியமைக்க முடியும். இதற்கு எதிராக சட்டமா அதிபருக்கு கூட நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.