நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால், அந்த தொற்றை ஒழித்துவிட்ட நாடாக நியூஸிலாந்து...
நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால், அந்த தொற்றை ஒழித்துவிட்ட நாடாக நியூஸிலாந்து உருவாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
50 இலட்சம் பேர் வசிக்கும் நியூஸிலாந்தில், கடந்த பெப்ரவரி இறுதியில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில், சுமார் 1500 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 17 நாள்களில் 40,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதுவரை, நியூஸிலாந்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால், கொரோனா தொற்று இல்லாத நாடாக நியூஸிலாந்து மாறியுள்ளது.