தமிழ் மக்கள் தேசிய கூடடணியின் தேர்தல் செலவுக்கான நிதியை பொதுமகன் ஒருவர் தானாக முன்வந்து கட்சி தலைவர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தார். ...
தமிழ் மக்கள் தேசிய கூடடணியின் தேர்தல் செலவுக்கான நிதியை பொதுமகன் ஒருவர் தானாக முன்வந்து கட்சி தலைவர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தார்.
தேர்தல் செலவுக்கான நிதியை பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை பத்திரிகை ஊடாக அறிந்து கொண்ட இணுவிலை சேர்ந்த மகாலிங்கம் எனும் முதியவர் ஒருவர் இன்றைய தினம் ஒரு இலட்சத்து ஓராயிரம் ரூபாயை நீதியரசர் விக்னேஷ்வரனின் இல்லத்திற்கே சென்று நேரடியாக அவரிடமே கையளித்தார்.
இதன்போது மனம் நெகிழ்ந்த விக்னேஷ்வரன் இந்த பணத்தை மிகவும் பொறுப்புடன் செலவளிப்பதாகவும் உங்கள் எதிர்பார்ப்பு வீண்போகாது என்றும் உறுதியளித்தார்.