கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தற்காலிக குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நி...
கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தற்காலிக குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்காலிக குடியிருப்பாளர்கள் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்யவேண்டும் என மேல் மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம் தொம்பே பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று சோதனையிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேல் மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் பதிவேட்டில் பதிவு செய்யப்படாத அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும் பொலிஸ் நிலையத்தில் தங்களை பதிவு செய்யவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிமித்தம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.