2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அரசாங்க அச்சகர...
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அரசாங்க அச்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் அச்சிடப்பட வேண்டிய வாக்குகளடங்கிய விபரங்கள் தனித்தனிப் பிரிவுகளாக கையளிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் எந்த ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு சூனியம் ஆக்கப்பட்டால் அதற்குப் பதிலாக புதிய வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆணையாளர் நாயகம் அரசாங்க அச்சகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 1,62,63,885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 1,72,73,300 வாக்குகள் அச்சிடுவதற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவை 3,45,466 புத்தக கட்டுகளாக கட்டப்படும்.இதுதவிர இரட்டை வாக்குச்சீட்டுகளாக 4,14,525 வாக்குச் சீட்டுக்கள் 16,581 கட்டுகளாக தயார்படுத்த படவுள்ளன.