அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கடிதமொன்றினை அனுப்பியுள்ளது. 12 வருடங்களாக ...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கடிதமொன்றினை அனுப்பியுள்ளது.
12 வருடங்களாக தொடர்ந்தும் சிறையில் உள்ள 91 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.
கருணா அம்மான், பிள்ளையான், பத்மநாதன் போன்றோர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களை போலவே தாமும் விடுவிக்கப்படுவோம் என்ற நிலைப்பாட்டில் குறித்த அரசியல் கைதிகள் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பலவருடங்களாக சிறையில் இருப்பதன் காரணமாக, கருணை அப்படையில் அவர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஜனாதிபதியின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையுமெனவும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கடிதத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஶ்ரீகாந்தா மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.