இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் நேற்று இரவு காலமானார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ...
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் நேற்று இரவு காலமானார்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட வானொலிகளில் மூத்த அறிவிப்பாளராகவும், பல்துறைக் கலைஞராகவும் சி.நடராஜசிவம் செயற்பட்டிருந்தார்.
மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.