யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக வேலைத்திட்டங்களில் ஒன்றான வீடற்ற வறிய குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக வேலைத்திட்டங்களில் ஒன்றான வீடற்ற வறிய குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ராணுவத்தினரால் பல்வேறு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தை ஜே 360 கிராம சேவகர் பிரிவில் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டிற்கான அடிக்கலினை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நாட்டி வைத்தார்.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி கிராமசேவகர் அப்போது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானதென யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய இதன் போது தெரிவித்தார்